முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு..!
சேலம் மாவட்டம் மொரூரில் கட்சி கொடி ஏற்றுவது தொடர்பாக குறித்து வன்முறை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் பிரச்சனை உருவாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பட்டியலின சமூக மக்கள்காவல்துறையினரால் பல நெருக்கடிகளுக்கு உள்ளாவதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.






