உலகின் மிகப்பெரிய பனிப்பாறை இரண்டாக உடைந்தது..!
அண்டார்டிகா கண்டத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறை இரண்டாக உடைந்தது. கடல் பகுதியில் அமைந்து இருக்கின்ற பனிப்பாறை இரண்டாக உடைந்து உள்ளதாக ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
உடைந்த பகுதி 170 கிலோ மீட்டர் நீளமும் 25 கிலோ மீட்டர் அகலமும் இருப்பதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகிறது. இந்தப் பாறை உடைந்தால் கடல் நீர் மட்டம் உயர வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.
அண்டார்டிகாவில் உள்ள மொத்த பனிப் பாறைகள் உருகினால் கடல் நீர் மட்டம் 190 அடி வரை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.




