தமிழக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு..!
தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தமிழக அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லிபின் பொன்னுசாமி லீலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழக அரசின் தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், கனிமங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது.



