டெல்லியில் தொடங்கிய காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்..!
டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் காவிரி நீர் பகிர்வு, அணைகளின் நீர்மட்டம் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான நீர் திறப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை கருத்தில் கொண்டு, காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய அளவு நீரை திறந்துவிட ஆணையம் உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் உள்ளனர்.






