பசுபிக் கடலில் விழுந்த ரஷ்ய போர் விமானம்.. விமானிகள் மாயம்..!
ரஷ்ய போர் விமானம் பசுபிக்கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளானதில் விமானத்தில் பயணித்த இரண்டு விமானங்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் தீபகற்பத்தில் போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்பொழுது மிக் 31 போர் விமானம் பசுபிக் கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் இரண்டு பேர் கடலில் விழுந்தனர்.
கடலில் விழுந்த விமானங்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. போர் விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணம் குறித்து ரஷ்ய விமானப்படை எந்த தகவலையும் வெளியிடவில்லை. விபத்து காரணமாக குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.






