டிபியாக வைத்த குடும்ப போட்டோவை தவறாக எடிட் செய்த நபர்..!
சேலத்தை சேர்ந்த கார்த்தி தனது குடும்ப புகைப்படத்தை வாட்ஸப்பில் டிபியாக வைத்துள்ளார். அந்த புகைப்படத்தை சரத்குமார் என்பவர் தவறாக எடிட் செய்து பேஸ்புக்கில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது குறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் சரத்குமாரை சேலம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இதுபோல் சரத்குமார் பலரை மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது.





