--- --:--:-- --

ஏடிஎம் மையத்திற்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மர்மநபர்

Capture

சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவில் ஏடிஎம் மையத்துக்குள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை படமெடுக்க வந்த இளைஞர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை ராயப்பேட்டை வி எம் தெருவில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏடிஎம்மில் அதே பகுதியை சேர்ந்த சபி மற்றும் பைசல் ஆகிய இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை இரவு படம் எடுக்க சென்றுள்ளனர்.

 

அப்போது மர்ம நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் ஏடிஎம் மையத்தில் இருந்து பார்த்த இருவரும் அந்த நபர் கொள்ளையனாக இருக்கலாம் என எண்ணுகின்றனர். இதனை எடுத்த அந்த நபரை படித்த இளைஞர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

அதில் கைது செய்யப்பட்ட நபர் அதே பகுதியில் பிளாட்பார்மில் படுத்துறங்கும் சந்தோஷ் என்பது தெரியவந்தது. மேலும் மர்ம நபர்கள் சிலர் வீடு நேரம் ஏற்றிய மையத்திற்குள் இருந்து விட்டு சென்றதாகவும் அவர்கள் சென்ற பின்னர் ஏடிஎம் மையத்தில் உள்ளே சென்று பார்த்ததாகவும் அப்போது பணம் எடுக்க வந்த இளைஞர்கள் தன்னை திருடன் என நினைத்து போலீசில் ஒப்படைத்ததாகவும் சந்தோஷ் தெரிவித்துள்ளார். ஆனாலும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon