மகளின் கண் முன்னே தந்தையான செய்தியாளரை கொலை செய்த கும்பல்..!
காசியாபாத்தில் விஜய நகர் பகுதியை சேர்ந்த செய்தியாளரான விக்ரம் ஜோஷி நேற்று இரவு 10.30 மணி அளவில் இரண்டு மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது வழிமறித்து தாக்கப்பட்டார். இதை கண்டு இரண்டு மகள்களும் ஓட்டம் பிடித்த நிலையில் செய்தியாளரை மட்டும் அக்கும்பல் சரமாரியாகத் தாக்கி பிறகு துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடிவிட்டது.
இதில் ஒரு தோட்டா தலையில் பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரமுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் தனது மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்தது தொடர்பாக காவல் நிலையத்தில் செய்தியாளர் புகார் அளித்திருந்தார்.
அதற்கு அடுத்த நாளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 5 பேரை கைது செய்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.







