பெருநாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..!
பெருநாட்டில் ஏற்பட்ட கன மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். தொடர் மழையால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் பலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள் சாலையோரத்தில் கவிழ்ந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சில இடங்களில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் 395 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின. வெள்ளத்தில் தத்தளித்து வரும் மக்களை மீட்கும் நடவடிக்கையில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.





