அடித்து சென்ற தரைப்பாலம்..ஆபத்தை உணராமல் கடந்த மாணவர்கள்..!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணியில் இருந்து காரணி கிராமத்திற்கு செல்ல ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் உடைத்த தரைப்பாலம் ஆபத்தான முறையில் பொதுமக்கள் ஆற்றை கடந்து வருகின்றனர்.
10 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் இடையே உள்ளதால் தரைப் பாலத்தை சீரமைக்க வேண்டும் எனவும் புதுப்பாளையம் இடையே அமைக்கப்பட்டு வரும் உயர் மட்ட பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது.





