பிறந்த நாளில் விபத்தில் உயிரிழந்த சிறுவன்..!
விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 5 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சிறுவனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் இந்த நிகழ்வு அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த ரஜினி என்பவர் தனது உறவினர் மகன் ஐந்து வயது பதின் சர்மாவுடன் இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் நோக்கி சென்றுள்ளார்.
அவரது வாகனத்தின் எதிரே 2 கல்லூரி பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு சென்றனர். அப்போது இரு சக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த கல்லூரி பேருந்து வேகமாக மோதி விபத்து நேரிட்டது.






