பாரதிய ஜனதா கட்சியினர் மாவோயிஸ்டுகளை விட மோசமானவர்கள்
பாரதிய ஜனதா கட்சியினர் மாவோயிஸ்டுகளை விட மோசமானவர்கள் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக வசை பாடுகிறார்.
புரலியார் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தலுக்கு முன்னர் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு வெற்றிபெற்ற பிறகு காணாமல் போய் விடுவர் என விமர்சித்தார்.
அரசியல் என்பது ஒரு புனிதமான சித்தாந்தம் மற்றும் தத்துவத்துடன் கூடியது என்று குறிப்பிடுவதால் இதனை சட்டையை போன்று நாள்தோறும் மாற்றிக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.






