தமிழக சட்டப்பேரவை தொடர் 4 நாட்கள் நடைபெறும்…!
தமிழக சட்டப்பேரவை தொடர் 4 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா காரணமாக வழக்கமாக நடைபெறும் இடத்திற்கு பதிலாக கலைவாணர் அரங்கில் தனிமனித இடைவெளியுடன் கூட்டத்தை நடத்துவதற்கு பொதுப்பணித் துறை ஏற்பாடு செய்து வருகிறது.
கூட்டத்தொடருக்கு முன்னதாக எம்எல்ஏக்களுக்கு கொரொனா பரி சோதனை நடத்துவது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் சபாநாயகர் தனபால் ஆலோசனை செய்வார் என்றும் தெரிகிறது. இந்த கூட்டத் தொடரின்போது 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என கூறப்படுகிறது.







