சுஜித் இழப்பே கடைசியா இருக்கட்டும்! எலக்ட்ரீசியனின் புதிய கண்டுபிடிப்பு
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தைபோல மற்றொரு துயரம் நேரிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியவர்களை மீட்கும் கருவி ஒன்றை எலக்ட்ரீசியன் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
கீழமாத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்ற அவர் ஐந்தாயிரம் ரூபாய் செலவில் இந்த கருவியை உருவாக்கியுள்ளார். ஏர் லாக் முறையில் தலையை பிடித்து அல்லது கைகளை பிடித்து தூக்கும் வகையில் இந்த கருவியை உருவாக்கி இருக்கும் வெங்கடாசலம் இதனை அரசு பயன்படுத்தினால் அதற்கேற்ற மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.





