பொது வெளியில் தும்மிய நபர்! அடித்து உதைத்த மக்கள்!
மகாராஷ்டிராவின் கொரொனா பீதியின் காரணமாக பொது இடத்தில் தும்மிய ஒருவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் கொரொனா குறித்து பொது மக்களிடையே அதிக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கோலாப்பூரில் சுகாதாரமற்ற முறையில் தும்மியதாக ஒருவரை பொதுமக்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.






