--- --:--:-- --

குப்பை தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள வெள்ளி கிரீடம்..!

7

யிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் குப்பைத் தொட்டியிலிருந்து வெள்ளி கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குத்தாலம் பகுதியில் வழக்கம்போல் குப்பை சேகரிக்கும் பணியின்போது குப்பை தொட்டியில் வெள்ளி கிரீடம் இருப்பது தெரியவந்தது.

 

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில் தண்டாயுதபாணி கோவிலில் மாலைகளை அகற்றி குப்பைத் தொட்டியில் போடும் போது கிரீடம் தவறுதலாக குப்பையில் போடப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கிரீடம் கோவில் நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon