பெண் காவலரிடம் டெக்னாலஜியை பயன்படுத்தி பாலியல் தொல்லை..!
சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு பெண் காவல் ஆய்வாளர் குரலை மாற்றிப் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக உடுமலைப்பேட்டையை சேர்ந்த பெரியசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மொபைல் ஆப் மூலமாக தனது குரலை பெண் குரலாக மாற்றி பேசி பாலியல் தொல்லை அளித்ததை ஒப்புக்கொண்ட அவர் மீது ஏற்கனவே திருப்பூர் ராமநாதபுரம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இதே போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.





