வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
கோவையில் வீட்டில் தனியே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை அளித்ததாக கால் டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். உப்பிலிபாளையம் காந்தி நகர் மூன்றாவது விதியை சிறந்த சுதர்ஷன் என்று அந்த நபர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை இரவு குடிபோதையில் இருந்த சுதர்ஷன் அருகில் உள்ள குடிசைப் பகுதிக்கு சென்று அங்குள்ள குடிசை ஒன்றில் தனியே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே சுதர்சன் ஓடி ஒளிந்திருக்கிறார். தகவலறிந்து வந்த போலீசார் ஒளிந்திருந்த சுதர்சனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.






