ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து சிதம்பரம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக டெல்லி சிபிஐ நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கண்ட தோல்வி அரசியல் சாசனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை என்று தெரிவித்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




