குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும்..!
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலையொட்டி அனந்த்நாக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் வாக்குறுதிகளை அவர் அறிவித்தார்.
அதன்படி ஜம்மு காஷ்மிரில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும்.அதேபோல் காலியாக இருக்கும் ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.அதேபோல் காலியாக இருக்கும் ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
மேலும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் 11 கிலோ அரிசி வழங்கப்படும்.முக்கியமாக ரூ. 25 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும்.ஜம்மு காஷ்மிரில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.





