சூறாவளி காரணமாக தீவுகளாக மாறிய குடியிருப்புகள் ..!
சீனாவை தாக்கிய சூறாவளி காரணமாக குடியிருப்புகள் தீவுகளாக மாறின. கார்கள் இருசக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கின. சூறாவடி தாக்கிய பொழுது ஒரே நேரத்தில் 15 சென்டிமீட்டர் மழை பொழிந்ததால் நகர் முழுவதும் வெள்ளைக்காடாக காட்சி அளிக்கிறது.
நெடுஞ்சாலைகள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. சாலைகளில் தேங்கிய நீரை அகற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் வெளியே வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.





