வெண்கலப் பதக்கம் வென்ற ஹாக்கி வீரருக்கு கிடைத்த பரிசு..!
ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணியின் கோல் கிப்பர் ஸ்டீஜேசுக்கு கேரள அரசு இரண்டு கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
கேரள அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்கு பரிசளிப்பது குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி முக்கிய கல்வித் துறையில் துணை இயக்குனராக இருப்பவருக்கு இணை இயக்குனருக்கு பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஒலிம்பிக்கில் பங்கேற்ற திருநங்கைகளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்குவதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.







