இறப்பிலும் இணை பிரியா தம்பதி !!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆவலி சின்னாம்பாளையத்தை சேர்ந்த தம்பதிகள் பாலகிருஷ்ணன் – கோமளவல்லி. வயதானவர்கள். இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள்.மூவருக்கும் திருமணம் முடித்து வைத்து விட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணனுக்கு மாரடைப்பால் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து அறிந்த கோமளவல்லி கடும் அதிர்ச்சியில் அவரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இறப்பிலும் இணை பிரியாமல் தம்பதி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் முடித்தவுடனேயே ” டைவர்ஸ் ” வாங்கிச்செல்லும் இக்காலத்தில் இறப்பிலும் இணை பிரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







