மணிப்பூரை விட இஸ்ரேல் மீதே பிரதமர் மோடிக்கு அதிக அக்கறை..!
மணிப்பூரை விட இஸ்ரேல் விவகாரத்தில் தான் பிரதமர் மோடி ஆர்வம் காட்டுகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரண்டு நாள் பயணமாக மிசோரம் சென்ற ராகுல் காந்தி அணிவகுப்பை தொடங்கி நடை பயணம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி சிறு மற்றும் நடுத்தர மனிதர்களை அழிக்கவும் விவசாயிகளை பலவீனப்படுத்தவும் ஜிஎஸ்டி வடிவமைக்கப்பட்டுள்ளது எனக் கூறி குற்றம் சாட்டினார்.
பிரதமரின் இந்திய அரசு இஸ்ரேல் மீது என்ன நடக்கிறது? மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதில் சிறிதளவு அக்கறை காட்டவில்லை எனக் கூறி வியப்பை தருகிறது என கூறினார்





