அண்ணாமலையுடன் போட்டோ எடுத்த பெண் போலீஸ்..!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் பெண் போலீஸ் ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் நித்திய கல்யாணி என்பதும் போட்டோ எடுத்தது உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் என்பதும் தெரியவந்தது.
அதேபோல் அங்கிருந்து உதவி ஆய்வாளர் ஒருவர் மரியாதை செலுத்தி வரவேற்பு கொடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.





