திடீர் நிலநடுக்கம் அச்சத்தில் மக்கள்..!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு வானிலை மற்றும் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை. அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.






