திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா தொடக்கம்..!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா தொடங்கியது. இதனை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.
உற்சவ சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானைக்கு பால், சந்தனம் இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருக பெருமானின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். பங்குனி திருவிழா 15 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.





