--- --:--:-- --

தமிழகத்தில் இன்று மழை..!

3

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

 

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

 

 

அதே வேளையில், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருப்பதால் கடலோர தமிழகத்தில் அசவுகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

Leave a Reply

Right Menu Icon