மக்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..!
கடும் வெப்பம் காரணமாக தலைநகர் டெல்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களிலும் தொடங்கவில்லை என்றும் தொடர்ந்து பருவமழை குறித்து கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹரியானா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்த நிலை இன்னும் நான்கு நாட்களுக்கு தொடரும் என்பதால் மக்கள் கவனமாக வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





