ஓடிசா மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம்!
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஒடிசா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஒடிசா மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது வாய் மற்றும் மூக்கை மறைக்கும் வகையில் இரண்டு அடுக்கு முக கவசங்களை அணிய வேண்டும் என்றும், நாளை காலை 7 மணி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் ஆணையிடப்பட்டுள்ளது.
கர்சீப் அல்லது வேறு ஏதாவது ஒரு துணியை பொதுமக்கள் முகக் கவசங்கள் ஆக பயன்படுத்தலாம் என்றும் ஒடிசா அரசு கூறியுள்ளது.






