தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நோட்டீஸ்..!
கேரள தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன் மீது சுங்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் வெளிநாட்டு கரன்சி அனுப்பி வைத்ததாக பினராயி விஜயன் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தூதரக அதிகாரியாக பணியாற்றிய சுரேஷ் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கேரளா தங்கம் டாலர் கடத்தல் வழக்கை விசாரிக்க நீதிபதி மோகன் தலைமையில் மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிஷனுக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.






