புதிய வகை கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 948 ஆக உயர்வு..!
இந்தியாவில் புதிய வகை கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 948 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை பெருந்தொற்று தற்போது பிற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வகை பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய வகை பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 948 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.






