--- --:--:-- --

விக்ரம் லேண்டரை நாளை புகைப்படம் எடுக்கவுள்ள நாசாவின் ஆர்பிட்டர்

download (1)

சந்திராயன்-2 விண்கலத்தில் இருந்து நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டர் நாளை புகைப்படம் எடுக்க இருக்கிறது.இந்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க வதற்கு சிறிது தூரம் இருந்த நிலையில் சிக்னல் துண்டிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் அமெரிக்காவில் நாசா தொடர்பு கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நாசா கடந்த 2009 ஆம் ஆண்டு அனுப்பிய ஆர்பிட்டர் நாளை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பகுதியை கடக்க இருப்பதாகவும் அப்போது அதனை புகைப்படம் எடுக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon