டி.வி.தொகுப்பாளராக களமிறங்கும் கங்கனா ரனாவத்..!
சர்ச்சைகளுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்முதலாக ஸ்டார்ஸ் மூலமாக நாடு முழுவதும் அறிமுகம் ஆனது. இப்பொழுது அதே நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.
இப்பொழுது மறுபடியும் லாக்கப் என்ற நிகழ்ச்சி வெளிவரப்போகிறது. அதனை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க இருக்கிறாராம். அதன் முதல் போட்டியாளராக பூனம் பாண்டே கலந்து கொள்ளப் போகிறார்.
இந்த நிகழ்ச்சியில் 16 பேரை தனியாக ஒரு லாக்கப்பில் அடைத்து விடுவதால் அவர்களுக்கு போன் டிவி எதுவும் தரப்பட மாட்டாது. பகலிரவு தெரியாமல் அவர்கள் பல மாதங்களாக இருக்கப் போகிறார்கள்.





