அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் – 2 பேர் காயம் – ஈரான் தூதருக்கு சம்மன்
ஈரான் தங்களது நாட்டில் இரண்டு ட்ரோன்களை வீசி இரண்டு பொதுமக்களை காயப்படுத்தியதாக அஜர்பைஜான் குற்றம் சாட்டியது, மேலும் வலுவான எதிர்ப்பை வெளியிடுவதற்காக ஈரானிய தூதரை வரவழைத்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஒரு ட்ரோன் ஈரானின் எல்லைக்கு அருகிலுள்ள நக்சிவானில் உள்ள விமான நிலையத்தில் விழுந்ததாகவும், மற்றொன்று பள்ளிக்கு அருகில் தரையிறங்கியதாகவும் அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களைக் கண்டித்துள்ள அஜர்பைஜான், ஈரானிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், “தக்க பதிலடி நடவடிக்கைகளை” எடுக்கும் உரிமையை அஜர்பைஜானுக்கு இருக்கிறது என்றும் கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




