போடி தொகுதியில் அதிமுக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடம் தேனி மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தேனி மாவட்டம் அம்மா பேரவை பொருளாளர் ஆன குறிஞ்சிமணி என்ற அவரது வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓ பன்னீர் செல்வத்தின் வெற்றியை குறைக்கும் விதத்தில் எதிர்க்கட்சியினர் வருமானவரித்துறையினர் தகவல் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.






