விஜய் பற்றி பேசி நட்பை முறிக்க விரும்பவில்லை: வைரமுத்து
விஜய் அரசியல் வருகை பற்றி பேசி நட்பை கெடுக்க விரும்பவில்லை என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். விஜய் மீது தனக்கு அதிக நட்பு உண்டு என்ற காரணத்தால், அரசியல் குறித்தான கருத்துக்களை கூற விரும்பவில்லை எனவும், அதே நேரத்தில் உண்மையை சொல்லாமல், பொய்யனாக இருக்கவும் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்ய முயன்றால், அவர்கள் தோற்றுப்போவார்கள் என்றும் சாடியுள்ளார்.





