மனைவியை கட்டிவைத்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்த கணவர்..!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மனைவியை கட்டிவைத்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்து வந்த கணவர் கைது செய்யப்பட்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து நடுவில் பகுதியில் வசித்து வரும் சுரேஷ்ராஜன் ஆக்ஸிபாய் தம்பதி வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்தனர்.
அங்கு ஆக்ஸிபாய் நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டு படுகாயம் அடைந்திருந்தார். அந்த பெண்ணை மீட்ட காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கில் அவரது கணவரை கைது செய்தனர்.






