செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு ஒத்திவைப்பு..!
செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேர்சேவேரன்ஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரை பறக்கவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
விரைவில் கோளாறு சரிசெய்யப்பட்டு செவ்வாயில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு எந்த தேதியில் நடைபெறும் என்பது அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் 1.8 கிலோ எடை கொண்டதாகும்.






