சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து..!
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தேவையில்லாதது என்ற ஐகோர்ட்டின் பரிந்துரையை அரசு ஏற்றதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், வேறு வழக்குகள் நிலுவையில் இல்லையெனில், உடனடியாக அவரை பிணையில் விடுவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டாஸ் பாய்ந்தது.





