தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களை கௌரவித்த கூடலூர் எம்.எல்.ஏ..!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நீலகிரியில் அரசு தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களை கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் கவுரவித்தார்.
தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வந்த பெண் தொழிலாளர்களை நேரில் சந்தித்த அவர் அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்ததோடு சால்வை அணிவித்து அவர்களை கௌரவித்தார்.





