தீபாவளி பண்டிகைக்காக வாழ்த்து தெரிவித்துள்ள ஆளுநர் மற்றும் முதல்வர்..!
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நன்மையையும் தீமையையும் கொண்டாடும் விழாவாக தீபாவளித் திருநாள் திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கமும் அமைதியும் ஆரோக்கியத்தையும் தீபாவளித்திருநாள் வாரி வழங்கட்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில் தீப ஒளி திருநாள் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும் காரிருள் மறைந்து அறிவு ஒளி பிறந்து இன்பமும் இனிமையும் நிறைந்த நன்னாளாக விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.






