--- --:--:-- --

எண்ணூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்

7

சென்னை எண்ணூரில் கரை ஒதுங்கிய சுமார் 30 டன் எடை கொண்ட ராட்சத திமிங்கலத்தின் உடல் மீட்கப்பட்டு கடற்கரையில் புதைக்கப்பட்டது. இறந்துபோன ராட்சத திமிங்கலத்தின் உடல் கடற்கரையில் அழுகிய நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதைக்கண்ட அப்பகுதியினர் மீனவர்களின் உதவியுடன் திமிங்கலத்தின் உடலை மீட்க முயற்சி செய்தனர்.

 

ஆனால் அது பலன் அளிக்காததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடலில் மிதந்த திமிங்கலத்தின் உடலில் கயிறு கட்டி ஜேசிபி வாகனம் மூலம் கரைக்கு இழுத்தனர். அதன்பிறகு கடற்கரையில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு திமிங்கலத்தின் உடல் புதைக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon