கிருஷ்ணகிரியில் வலுக்கட்டாயமாக குழந்தை திருமணம்..!
ஓசூர் அருகே குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள மலை கிராமம் ஒன்றைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் 30 வயதான மார்ட்டீஸ் என்பவருக்கும் சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்தில் விருப்பமில்லாத சிறுமி மாதேஷ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக தோளில் தூக்கி சென்று மாதேஷின் வீட்டில் விட்டுள்ளனர். அப்பொழுது சிறுமி கதறி அழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





