குஜராத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சரக்கு வாகனம்..!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இலகுரக சரக்கு வாகனம் அடித்து செல்லப்பட்டது. ராஜ்கோட் மாவட்ட கோகர்தார் ஆற்று பாலத்தை அந்த வாகனம் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.இந்த சம்பவத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒருவர் மாயமானதை அடுத்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.







