சேலத்தில் அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு..!
சேலத்தில் அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக நேற்றைய தினம் சேலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குடும்ப நல ஆலோசனைக்காக வந்த மற்றும் அவரது கணவர் மற்றும் மனைவிக்கு ஒரு மணி நேரத்திற்கு குடும்ப நல ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆலோசனையின் முடிவில் தான் இது போன்ற அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது.
கணவருடன் சேர்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை என்று ரேவதி கூறியதையடுத்து ஆத்திரமடைந்த ஏசுதாஸ் துப்புரவு பணியாளர் என்பதால் அவருக்கு எளிதாக 5 லிட்டர் ஆசிட் கிடைத்ததையடுத்து அவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரேவதி மீது அமிலத்தை ஊற்றி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார்.






