பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி இராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை (ஜூலை 29) நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பா.ம.க-வின் தலைவராக அவரே தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.