--- --:--:-- --

வெளிப்படையான அரசாங்கமே முதல்வரின் லட்சியம்” – ஆசிரியர் சங்கங்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

4

ள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகள் மற்றும் கல்வித் துறை தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய அவர், “வெளிப்படையான அரசாங்கமே எங்கள் முதல்வரின் லட்சியம்.

 

 

ஆசிரியர்களின் நலன், மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் கல்வி அமைப்பின் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் அனைத்தும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, சாத்தியமானவற்றுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

 

 

மேலும், ஆசிரியர்கள் மற்றும் அரசுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து இதுபோன்ற கலந்துரையாடல்கள் நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Leave a Reply

Right Menu Icon