இரட்டிப்பு லாபம்..ஆசை வார்த்தை..கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பல்..!
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி மூன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்த இருவரை ஆவடி இணைய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் அடுத்த மாங்காட்டை சேர்ந்த ஜெயராமன் என்பவர் அளித்த புகாரில் புதுச்சேரியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.





