--- --:--:-- --

திண்டுக்கல் மாவட்டம் செல்போன் வாங்கி தராததால் மாணவி தற்கொலை..!

12

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செல்போன் வாங்கி தராததால் மனமுடைந்த மாணவி தைலம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாயுடு புரத்தை சேர்ந்த சண்முகப்பிரியா என்ற மாணவி அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

 

தற்போது கொரொனா ஊரடங்கு காரணமாக பதினோராம் வகுப்பு பாடங்கள் வாட்ஸ் அப் மற்றும் ஆன்லைன் மூலமாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக சண்முகப்பிரியா தமது தந்தையிடம் கேட்டபோது அவரால் வரமுடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சண்முகப்பிரியா வீட்டில் இருந்த வின்டர் க்ரீன் என்ற தடை செய்யப்பட்ட தைலத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon